Navaiman   Navaiman
முகப்பு செய்திகள் மரண அறித்தல்கள் படங்கள் காணொளிகள் நேரடி ஒளிபரப்பு தொடர்புகளுக்கு
தமிழ் செய்திகள்
 அதிர்வு
 சங்கதி
 ஈழதேசம்
 பதிவு
 தமிழ்வின்
 பிபிசி தமிழ்
 யாழ்.இணையம்
 வெப் உலகம்
 நக்கீரன்
 தென் செய்தி
 லங்காசிறி
 தமிழ் சிஎன்என்
 எதிரி
 நாம் தமிழர்
 ஆதவன் நியூஸ்
 தாரகம்
 வத்திக்கான் செய்தி
ஆங்கில செய்திகள்
 Tamil Net
 Tamil Gurdian
 Tamil Canadian
 Daily Mirror
 Ada Derana
 UK Tamil News
 Colombo Page
 The Academic
தமிழ் பத்திரிகைகள்
 தினக்குரல்
 வீரகேசரி
 தினமணி
 சுடர் ஒலி
 தினகரன்
 தின பூமி
 உதயன்
தமிழ் பாடல்கள்
 ராகா
 ஓசை
 தமிழ் பீற்
 ஈழம் பாடல்கள்
 தமிழ் வயர்
சினிமா தளங்கள்
 சினிமா உலகம்
 தமிழ் சினிமா
 தினமலர் சினிமா
 தமிழ் ஸ்டார்
 சென்னை 365
 சினி ஸ்பொட்
 இந்தியா-கிளிட்ஸ்
 tamil filmibeat
வானொலிகள்
 புலிகளின் குரல்
 சக்தி FM
 வர்ணம் FM
 தமிழ் FM
 சுடர் FM
 காதல் FM
 தமிழர்குரல்
 ஈழப்பறவைகள் இணையம்
தொலைக்காட்சிகள்
 தீபம்
 தமிழன்
 தந்தி
 புதிய தலைமுறை
 சத்தியம்
 News7 Tamil
 மக்கள் TV
 Jaya TV
 Vasanth TV
 பொதிகை TV
 IBC தமிழ்
திரைப்படங்கள்
 Tamil Yogi
 Tamil Gun.com
 Thakkali
 Run Tamil
 Tamil Key.com
 Cool Tamil
 Thiruttu VCD

மீண்டும் ஜெயலலிதா முதல்வரானது இலங்கைத் தமிழர்களுக்கு சாதகமானது! - தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு

பிரசுரிக்கபட்ட திகதி: 26/05/2016 (வியாழக்கிழமை)

தமிழக முதல்வராக மீண்டும் ஜெயலலிதா பதவியேற்றமை இலங்கையில் உள்ள அனைத்துத் தமிழர்களுக்கும் சாதகமானது. இலங்கையில் நீண்டகாலமாகத் தொடரும் இனப்பிரச்சினைக்கு நிரந்தர அரசியல் தீர்வு கிடைக்க இலங்கை அரசுக்கும், இந்திய மத்திய அரசுக்கும் ஜெயலலிதா தொடர்ந்து அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.ஆறாவது தடவையாகவும் தமிழக முதல்வராக செல்வி ஜெயலலிதா ஜெயராம் பதவியேற்றுள்ளார்.

அவர் மீண்டும் முதல்வராகப் பதவியேற்றமையால் தமிழக மக்கள் மட்டுமன்றி வடக்கு, கிழக்கு மக்களும் பட்டாசுகள் கொளுத்தி தமது மகிழ்ச்சியை வெளிக்காட்டினர். ஜெயலலிதா தேர்தல் பிரசாரங்களின்போது இந்தியத் தமிழர்கள் மட்டுமன்றி இலங்கைத் தமிழர்கள் சார்பாகவும் பல அறிவிப்புக்களை வெளியிட்டிருந்தார். இதன்மூலம் அவர் மீதான எதிர்பார்ப்புக்கள் இன்னும் அதிகமாகியுள்ளன.

ஜெயலலிதா, தமிழக முதல்வராக மீண்டும் பதவியேற்றமை தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் கருத்துத் தெரிவிக்கையில், "ஜெயலலிதா மீண்டும் தமிழக முதல்வராகியமை வடக்கு, கிழக்கு தமிழ் மக்களுக்கு மட்டுமன்றி இலங்கையில் உள்ள அனைத்துத் தமிழர்களுக்கும் சாதகமானது. தமிழக அரசியலும், தமிழ் நாட்டு மக்களும் இலங்கைத் தமிழர்களுக்கு சார்பான முடிவையே வழங்குவார்கள்" - என்றார்.

இதேவேளை, கச்சதீவு விவகாரம் தொடர்பில் சுமந்திரன் எம்.பியிடம் வினவியபோது, "கச்சதீவானது இரு நாடுகளுக்கும் இடையில் உள்ள பிரச்சினைக்குரிய விடயமாகும். இதற்கு இந்திய மத்திய அரசும், இலங்கை அரசும் இணைந்தே தீர்வை வழங்க வேண்டும்" - என்று பதிலளித்தார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் நாடாளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் எம்.பி. கருத்துத் தெரிவிக்கையில், "கடந்த காலங்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கும்போது, இலங்கை தமிழர்களுக்குச் சார்பான முடிவுகளை ஜெயலலிதா எடுக்கவாய்ப்புள்ளது. ஏனெனில், இலங்கைத் தமிழரின் நன்மை கருதி அவர் கடந்த ஆட்சியின்போது பல தீர்மானங்களை நிறைவேற்றியிருந்தார். இந்திய மத்திய அரசுக்கு அழுத்தங்களும் கொடுத்துள்ளார். எனவே, இலங்கையில் நீண்டகாலமாகத் தொடரும் இனப்பிரச்சினைக்கு நிரந்தர அரசியல் தீர்வு கிடைக்க மைத்திரி தலைமையிலான இலங்கை அரசுக்கும், நரேந்திர மோடி தலைமையிலான இந்திய மத்திய அரசுக்கும் தமிழக முதலவர் ஜெயலலிதா தொடர்ந்து அழுத்தம் கொடுக்கவேண்டும்" - என்றார்.

கச்சதீவு விவகாரம் தொடர்பில் செல்வம் அடைக்கலநாதன் எம்.பி. கருத்துத் தெரிவிக்கையில், "கச்சதீவு என்பது இலங்கைக்குச் சொந்தமான இடம். அதில் ஒரு ஆலயத்தை நிர்மாணிக்க இந்தியாவிடம் ஒப்புதல் பெற வேண்டிய தேவையில்லை. ஆனால், இலங்கை அரசும் இந்திய அரசும் இந்த விடயத்தில் ஒரு புரிந்துணர்வுடன் செயற்படவேண்டும். இந்திய அரசை பகைத்துக் கொள்ளக் கூடாது என்ற நிலைப்பாட்டில் இலங்கை அரசு இருக்குமானால் இரு நாடுகளும் கலந்துரையாடி ஒரு தீர்வை வழங்கலாம்" - என்றார்.




மரண அறிவித்தல்கள்
மேலும்... 
புதிய படங்கள்
நாவாந்துறை புனித மரியன்னை தேவாலயத்தில் வளாகத்தில் சிலுவைப்பாடு சிற்பத்தொகுதி
Uploaded Date: 30/04/2018
சின்னாவின் உப்புக்கடலோரம் கவிதை நூல் வெளியிடப்பட்டது
Uploaded Date: 12/04/2018
புனித நீக்கிலார் ஆலய திருவிழா 2017 படத் தொகுப்பு
Uploaded Date: 30/04/2017
தவக்கால செயல்திட்டமாக நாவாந்துறை சென்மேரிஸ் இளைஞர் கழகம் நிதிய உதவி
Uploaded Date: 12/03/2017
யாழ் நாவாந்துறை புனித மரியள் ஆலய திருவிழா
Uploaded Date: 15/08/2016
புதிய காணொளிகள்
வந்தான் ஒருவன் வந்தான்
Uploaded Date:08/03/2021
ஆளப்போறான் தமிழன் உலகமெல்லாமே
Uploaded Date:28/10/2017
பரபாஸ்” திருப்பாடுகளின் காட்சிகளின்
Uploaded Date:18/04/2017
ஐல்லிக்கட்டு ஈழ மண்ணில் உருவாக்கப்பட்ட புதிய பாடல்
Uploaded Date:20/01/2017
ஜல்லிக்கட்டு இன்றைய நிலை
Uploaded Date:14/01/2017