Navaiman   Navaiman
முகப்பு செய்திகள் மரண அறித்தல்கள் படங்கள் காணொளிகள் நேரடி ஒளிபரப்பு தொடர்புகளுக்கு
தமிழ் செய்திகள்
 அதிர்வு
 சங்கதி
 ஈழதேசம்
 பதிவு
 தமிழ்வின்
 பிபிசி தமிழ்
 யாழ்.இணையம்
 வெப் உலகம்
 நக்கீரன்
 தென் செய்தி
 லங்காசிறி
 தமிழ் சிஎன்என்
 எதிரி
 நாம் தமிழர்
 ஆதவன் நியூஸ்
 தாரகம்
 வத்திக்கான் செய்தி
ஆங்கில செய்திகள்
 Tamil Net
 Tamil Gurdian
 Tamil Canadian
 Daily Mirror
 Ada Derana
 UK Tamil News
 Colombo Page
 The Academic
தமிழ் பத்திரிகைகள்
 தினக்குரல்
 வீரகேசரி
 தினமணி
 சுடர் ஒலி
 தினகரன்
 தின பூமி
 உதயன்
தமிழ் பாடல்கள்
 ராகா
 ஓசை
 தமிழ் பீற்
 ஈழம் பாடல்கள்
 தமிழ் வயர்
சினிமா தளங்கள்
 சினிமா உலகம்
 தமிழ் சினிமா
 தினமலர் சினிமா
 தமிழ் ஸ்டார்
 சென்னை 365
 சினி ஸ்பொட்
 இந்தியா-கிளிட்ஸ்
 tamil filmibeat
வானொலிகள்
 புலிகளின் குரல்
 சக்தி FM
 வர்ணம் FM
 தமிழ் FM
 சுடர் FM
 காதல் FM
 தமிழர்குரல்
 ஈழப்பறவைகள் இணையம்
தொலைக்காட்சிகள்
 தீபம்
 தமிழன்
 தந்தி
 புதிய தலைமுறை
 சத்தியம்
 News7 Tamil
 மக்கள் TV
 Jaya TV
 Vasanth TV
 பொதிகை TV
 IBC தமிழ்
திரைப்படங்கள்
 Tamil Yogi
 Tamil Gun.com
 Thakkali
 Run Tamil
 Tamil Key.com
 Cool Tamil
 Thiruttu VCD

சென்னையில் கிளம்பிய விமானப்படை விமானம் மாயம் : 29 பேர் கதி என்ன?

பிரசுரிக்கபட்ட திகதி: 22/07/2016 (வெள்ளிக்கிழமை)

சென்னை: தாம்பரம் விமானப்படை விமான தளத்தில் இருந்து அந்தமானுக்கு வீரர்கள் உட்பட 29 பேருடன் சென்ற இந்திய விமானப்படைக்கு சொந்தமான விமானம் நடுவழியில் திடீரென மாயமானதால் நாடு முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நடுவானில் காணாமல் போன போர் விமானத்தை தேடும் பணியில் விமானப்படை விமானங்களும், 13 கப்பல்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. விமானத்தில்  உள்ளவர்களில் அதிகாரிகள் உட்பட 12 பேர் தமிழர்கள்.   சென்னையை அடுத்த  தாம்பரத்தில் விமானப்படை பயிற்சி பள்ளியும், விமானப்படை தளமும் உள்ளது. இந்த விமானப்படை தளத்தில் ரஷ்யாவில் இருந்து வாங்கப்பட்ட இலகு ரக விமானமான ஏஎன்-32 செயல்பாட்டில் இருந்து வந்தது. ரஷ்ய நாட்டு தயாரிப்பான இந்த விமானம் சரக்கு கொண்டு செல்வதற்கும், வீரர்களை அழைத்து செல்வதற்கும் பயன்படுத்தப்பட்டது.


அந்தமானுக்கு புறப்பட்டது: இந்நிலையில், தாம்பரம் விமானப்படை தளத்தில் இருந்து நேற்று காலை 8.30 மணிக்கு ஏஎன்-32 என்கிற அந்த விமானம் அந்தமான் தலைநகர்  போர்ட் ஃபிளேயருக்கு புறப்பட்டது. இந்த விமானத்தில் 6 விமானிகள், உதவி விமானிகள், 12 வீரர்கள், ராணுவம், கடற்படை, கடலோர காவல்படையை சேர்ந்த தலா ஒருவர் என 3 வீரர்கள், வீரர்களின் குடும்பத்தைச் சேர்ந்த 8 பேர் என 12 தமிழர்கள் உட்பட  மொத்தம் 29 பேர் இருந்துள்ளனர். தகவல் தொடர்பு துண்டிப்பு: ஏஎன்-32 என்கிற இந்திய போர் விமானம் சரியாக 11.30 மணிக்கு அந்தமான் சென்றிருக்க வேண்டும். ஆனால், இந்த விமானம் புறப்பட்ட ஒரு மணி நேரத்தில் விமான தளத்துடனான கட்டுப்பாட்டு அறையின் தொடர்பில் இருந்து துண்டிக்கப்பட்டது. அப்போது அந்த விமானம்  சென்னைக்கு கிழக்கே  சுமார் 300 கிமீ தொலைவில் வங்காள விரிகுடா கடல் மீது 23,000 அடி உயரத்தில்  பறந்துக் கொண்டு இருந்தது. அதனால் அதிர்ச்சி அடைந்த கட்டுப்பாட்டு அறை அலுவலர்கள் விமானத்தை தொடர்பு கொள்ள மேற்கொண்ட அனைத்து முயற்சிகளும் தோல்வி அடைந்தன. விமானம் திசை மாறி சென்றதா என்பதை கண்டறிய நடந்த முயற்சியும் பலனிக்கவில்லை.

தேடுதலில் 13 கப்பல்: விமானம் மாயமான தகவல், உடனடியாக விமானப்படை தளபதி அரூப் ராஹா உள்ளிட்ட உயரதிகாரிகளுக்கும், பாதுகாப்புத்துறை அமைச்சர் மனோகர் பாரிக்கருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டன. தகவல் அறிந்ததும் அவர்கள் உடனடியாக  காணாமல் போன விமானத்தை தேட உத்தரவிட்டனர். அடுத்த சில நிமிடங்களில்  கப்பற்படை, விமானப்படை, கடலோர பாதுகாப்பு படையினர்  காணாமல் போன விமானப்படை விமானத்தை தேடும் பணியை  தொடங்கினர். கடலோர பாதுகாப்பு படைக்கு சொந்தமான சிறிய ரக விமானங்கள், ரோந்து படகுகள், விமானப்படைக்கு சொந்தமான 2 டோனியர் ரக விமானங்கள்,  கடற்படைக்கு சொந்தமான 4  போர் கப்பல்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. அரக்கோணம் கடற்படை விமானதளத்தை சேர்ந்த மேலும் 2 விமானங்கள் நேற்று பிற்பகல் முதல் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளன. கடலுக்கடியில் தேடுவதற்காக நேற்று மாலையில் இருந்து நீர்மூழ்கி கப்பலும் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளது.

நேற்று காலை தொடங்கிய பணி இரவிலும் தொடர்ந்தது. காணாமல் போன விமானத்தை தேடும் பணியை பாதுகாப்பு அமைச்சகம் தொடர்ந்து கண்காணித்து வருகிறது. தேடும் பணியை மேம்படுத்துவது குறித்து விமானப்படை, கப்பற்படை, ராணுவ அதிகாரிகள் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகின்றனர். காணாமல் போன விமானம்  எரிபொருள் பற்றாக்குறை அல்லது தொழில்நுட்பக் கோளாறு காரணமாக திசை மாறி சென்றிருக்குமா, திடீர் வானிலை மாற்றத்தால் விபத்தில் சிக்கியிருக்குமா  என பல்வேறு யூகங்கள் அடிப்படையில் தேடுதல் வேட்டை நடந்து வருகிறது. விமானத்தில் இருந்தவர்களின் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களும் அச்சத்துடன் ராணுவ அதிகாரிகளை தொடர்ந்து தொடர்பு கொண்டு வருகின்றனர்.

3வது முறை சம்பவம்

இந்திய விமானப்படைக்கு சொந்தமான விமானம் அதுவும் ஏஎன்-32 வகை விமானம் காணாமல் போவது இது 2வது முறையாகும். ஏற்கனவே 1986ம் ஆண்டு மார்ச் 25ம் தேதி குஜராத் மாநிலம் ஜாம்நகரில் இருந்து 450 கிமீ தொலைவில் இந்திய பெருங்கடலில் காணாமல் போனது குறிப்பிடத்தக்கது.




மரண அறிவித்தல்கள்
மேலும்... 
புதிய படங்கள்
நாவாந்துறை புனித மரியன்னை தேவாலயத்தில் வளாகத்தில் சிலுவைப்பாடு சிற்பத்தொகுதி
Uploaded Date: 30/04/2018
சின்னாவின் உப்புக்கடலோரம் கவிதை நூல் வெளியிடப்பட்டது
Uploaded Date: 12/04/2018
புனித நீக்கிலார் ஆலய திருவிழா 2017 படத் தொகுப்பு
Uploaded Date: 30/04/2017
தவக்கால செயல்திட்டமாக நாவாந்துறை சென்மேரிஸ் இளைஞர் கழகம் நிதிய உதவி
Uploaded Date: 12/03/2017
யாழ் நாவாந்துறை புனித மரியள் ஆலய திருவிழா
Uploaded Date: 15/08/2016
புதிய காணொளிகள்
வந்தான் ஒருவன் வந்தான்
Uploaded Date:08/03/2021
ஆளப்போறான் தமிழன் உலகமெல்லாமே
Uploaded Date:28/10/2017
பரபாஸ்” திருப்பாடுகளின் காட்சிகளின்
Uploaded Date:18/04/2017
ஐல்லிக்கட்டு ஈழ மண்ணில் உருவாக்கப்பட்ட புதிய பாடல்
Uploaded Date:20/01/2017
ஜல்லிக்கட்டு இன்றைய நிலை
Uploaded Date:14/01/2017