Navaiman   Navaiman
முகப்பு செய்திகள் மரண அறித்தல்கள் படங்கள் காணொளிகள் நேரடி ஒளிபரப்பு தொடர்புகளுக்கு
தமிழ் செய்திகள்
 அதிர்வு
 சங்கதி
 ஈழதேசம்
 பதிவு
 தமிழ்வின்
 பிபிசி தமிழ்
 யாழ்.இணையம்
 வெப் உலகம்
 நக்கீரன்
 தென் செய்தி
 லங்காசிறி
 தமிழ் சிஎன்என்
 எதிரி
 நாம் தமிழர்
 ஆதவன் நியூஸ்
 தாரகம்
 வத்திக்கான் செய்தி
ஆங்கில செய்திகள்
 Tamil Net
 Tamil Gurdian
 Tamil Canadian
 Daily Mirror
 Ada Derana
 UK Tamil News
 Colombo Page
 The Academic
தமிழ் பத்திரிகைகள்
 தினக்குரல்
 வீரகேசரி
 தினமணி
 சுடர் ஒலி
 தினகரன்
 தின பூமி
 உதயன்
தமிழ் பாடல்கள்
 ராகா
 ஓசை
 தமிழ் பீற்
 ஈழம் பாடல்கள்
 தமிழ் வயர்
சினிமா தளங்கள்
 சினிமா உலகம்
 தமிழ் சினிமா
 தினமலர் சினிமா
 தமிழ் ஸ்டார்
 சென்னை 365
 சினி ஸ்பொட்
 இந்தியா-கிளிட்ஸ்
 tamil filmibeat
வானொலிகள்
 புலிகளின் குரல்
 சக்தி FM
 வர்ணம் FM
 தமிழ் FM
 சுடர் FM
 காதல் FM
 தமிழர்குரல்
 ஈழப்பறவைகள் இணையம்
தொலைக்காட்சிகள்
 தீபம்
 தமிழன்
 தந்தி
 புதிய தலைமுறை
 சத்தியம்
 News7 Tamil
 மக்கள் TV
 Jaya TV
 Vasanth TV
 பொதிகை TV
 IBC தமிழ்
திரைப்படங்கள்
 Tamil Yogi
 Tamil Gun.com
 Thakkali
 Run Tamil
 Tamil Key.com
 Cool Tamil
 Thiruttu VCD

அரசியல்வாதிகள் மத்தியில் துப்பாக்கிக் கலாசாரத்தை அனுமதிக்க முடியாது : இளஞ்செழியன் எச்சரிக்கை

பிரசுரிக்கபட்ட திகதி: 26/07/2016 (செவ்வாய்க்கிழமை)

கடந்த 2013 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் மாகாண சபை தேர்தல் பரப்புரையின் போது பொலிஸ் உத்தியோகஸ்த்தர் ஒருவரை துப்பாக்கியால் சுட்டு காயப்படுத்திய வழக்கில் திங்கட்கிழமை பிணை வழங்கியுள்ள நீதிபதி இளஞ்செழியன், அரசியல்வாதிகள் மத்தியில் இனிமேல் துப்பாக்கிக் கலாசாரத்தை அனுமதிக்க முடியாது என எச்சரிக்கை செய்துள்ளார். 

இந்தச் சம்பவத்தில் சந்தேக நபரான அப்போதைய வேட்பாளராகிய குமார் சவர்வானந்தன் என்பவர் கடத்த மார்ச் மாதம் 18 ஆம் திகதி கைது செய்யப்பட்டு கடந்த நான்கு மாதங்களாக சாவகச்சேரி நீதவான் நீதிமன்றத்தின் உத்தரவுக்கமைய விளக்கமறியலில் இருந்து வருகின்றார். 

இவரை பிணையில் விடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட பிணை மனுவை விசாரணை செய்த நீதிபதி இளஞ்செழியன் நிபந்தனைகளின் அடிப்படையில் சந்தேக நபரை பிணையில் செல்ல அனுமதித்துள்ளார்.

இந்த பிணை தொடர்பிலான தீர்ப்பில் நீதிபதி இளஞ்செழியன் தெரிவித்துள்ளதாவது:

துப்பாக்கியுடன் நடமாடும் அரசியல்வாதிகளுக்கு பிணை வழங்குவதில் கடினமான போக்கை நீதிமன்றங்கள் பின்பற்ற வேண்டும். 

தேர்தல் பரப்புரையின்போது, மக்கள் முன்னிலையில் துப்பாக்கிப் பிரயோகம் செய்யும் அரசியல்வாதிகளுக்கு இலகுவில் பிணை வழங்கப்படக் கூடாது. 

தேர்தல் காலத்தில் மக்கள் மத்தியில் ஜனநாயகம் பேசிக்கொண்டு, மோதல்களில் ஈடுபட்டு, துப்பாக்கிப் பிரயோகம் செய்யும் அரசியல்வாதிகளுக்கு பிணை வழங்கக் கூடாது. 

ஜனநாயகம் என்ற போர்வையில் யாழ் குடாநாட்டில் துப்பாக்கிக் கலாசாரத்தை இனிவரும் காலங்களில் அனுமதிக்க முடியாது. 

கடந்த 2009 ஆம் ஆண்டு வைகாசி மாதம் போர் முடிவடைந்ததன் பின்னர் 2013 ஆம்  ஆண்டு செப்டம்பர் மாதம் வடமாகாண சபைக்கான தேர்தல் நடத்தப்பட்டது, போர் முடிவடைந்ததன் பின்னர் அரசியல்வாதிகள் தங்களுடைய பாதுகாப்புக்கு துப்பாக்கிகள் கொண்டு செல்ல வேண்டிய அவசியமில்லை.  அதற்கான தேவையுமில்லை. 

அப்படிப்பட்டவர்கள் குற்றம் செய்ததாக குற்றம் சாட்;டப்பட்டால், அவர்களுக்குப் பிணை வழங்கக் கூடாது. ஆயினும் இந்த வழக்கில் வேட்பாளர்களுக்கிடையில் துப்பாக்கிப் பிரயோகத்தில் ஈடுபட்ட இரு வேட்பாளர்கள் குழுக்களில் ஒன்றாகிய மற்றைய குழுவின் நபருக்கு யாழ் மேல் நீதிமன்றம் ஏற்கனவே பிணை வழங்கியள்ளது. இதனைக் கருத்திற் கொண்டு, தீர்ப்புக்கள் இயலுமானவரை சமத்துவமாகப் பேணப்பட வேண்டும்.இரண்டு தரப்பினருக்கிடையே பாராபட்சம் இருக்கக் கூடாது என்பதன் அடிப்படையில் நிபந்தனைகளுடன் சந்தேக நபரைப் பிணையில் செல்ல இந்த நீதிமன்றம் அனுமதிக்கின்றது. 

ஐம்பதினாயிரம் காசு பிணையுடன், 2 சரீரப் பிணைகளில் கையொப்பமிட வேண்டும். அத்துடன் மாதத்தில் ஒரு தடவை நீதவான் நீதிமன்ற பதிவாளர் முன்னிலையில் சந்தேக நபர் கையொப்பம் இட வேண்டும். அவர் நாட்டை விட்டு வெளியேறக் கூடாது. சாட்சிகளுடன் எந்தவிதத் தலையீடும் இருக்கக் கூடாது. அவ்வாறு தலையீடு இருப்பின் பிணை ரத்துச் செய்யப்பட்டு, சந்தேக நபர்  மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்படுவார் என நீதிபதி தனது பிணை தீர்ப்பில் தெரிவித்துள்ளார்.  

அத்துடன், வேட்பளார்களுக்கிடையே நடைபெற்ற துப்பாக்கிப்பிரயோகத்தில் கைது செய்யப்பட்ட நபர்களின் இரண்டு வழக்குகளையும் 3 மாத காலத்தில் முடிவுறுத்துமாறு சாவகச்சேரி நீதிமன்றத்திற்கும் நீதிபதி இளஞ்செழியன் பணிப்புரை பிறப்பித்துள்ளார்.




மரண அறிவித்தல்கள்
மேலும்... 
புதிய படங்கள்
நாவாந்துறை புனித மரியன்னை தேவாலயத்தில் வளாகத்தில் சிலுவைப்பாடு சிற்பத்தொகுதி
Uploaded Date: 30/04/2018
சின்னாவின் உப்புக்கடலோரம் கவிதை நூல் வெளியிடப்பட்டது
Uploaded Date: 12/04/2018
புனித நீக்கிலார் ஆலய திருவிழா 2017 படத் தொகுப்பு
Uploaded Date: 30/04/2017
தவக்கால செயல்திட்டமாக நாவாந்துறை சென்மேரிஸ் இளைஞர் கழகம் நிதிய உதவி
Uploaded Date: 12/03/2017
யாழ் நாவாந்துறை புனித மரியள் ஆலய திருவிழா
Uploaded Date: 15/08/2016
புதிய காணொளிகள்
வந்தான் ஒருவன் வந்தான்
Uploaded Date:08/03/2021
ஆளப்போறான் தமிழன் உலகமெல்லாமே
Uploaded Date:28/10/2017
பரபாஸ்” திருப்பாடுகளின் காட்சிகளின்
Uploaded Date:18/04/2017
ஐல்லிக்கட்டு ஈழ மண்ணில் உருவாக்கப்பட்ட புதிய பாடல்
Uploaded Date:20/01/2017
ஜல்லிக்கட்டு இன்றைய நிலை
Uploaded Date:14/01/2017