Navaiman   Navaiman
முகப்பு செய்திகள் மரண அறித்தல்கள் படங்கள் காணொளிகள் நேரடி ஒளிபரப்பு தொடர்புகளுக்கு
தமிழ் செய்திகள்
 அதிர்வு
 சங்கதி
 ஈழதேசம்
 பதிவு
 தமிழ்வின்
 பிபிசி தமிழ்
 யாழ்.இணையம்
 வெப் உலகம்
 நக்கீரன்
 தென் செய்தி
 லங்காசிறி
 தமிழ் சிஎன்என்
 எதிரி
 நாம் தமிழர்
 ஆதவன் நியூஸ்
 தாரகம்
 வத்திக்கான் செய்தி
ஆங்கில செய்திகள்
 Tamil Net
 Tamil Gurdian
 Tamil Canadian
 Daily Mirror
 Ada Derana
 UK Tamil News
 Colombo Page
 The Academic
தமிழ் பத்திரிகைகள்
 தினக்குரல்
 வீரகேசரி
 தினமணி
 சுடர் ஒலி
 தினகரன்
 தின பூமி
 உதயன்
தமிழ் பாடல்கள்
 ராகா
 ஓசை
 தமிழ் பீற்
 ஈழம் பாடல்கள்
 தமிழ் வயர்
சினிமா தளங்கள்
 சினிமா உலகம்
 தமிழ் சினிமா
 தினமலர் சினிமா
 தமிழ் ஸ்டார்
 சென்னை 365
 சினி ஸ்பொட்
 இந்தியா-கிளிட்ஸ்
 tamil filmibeat
வானொலிகள்
 புலிகளின் குரல்
 சக்தி FM
 வர்ணம் FM
 தமிழ் FM
 சுடர் FM
 காதல் FM
 தமிழர்குரல்
 ஈழப்பறவைகள் இணையம்
தொலைக்காட்சிகள்
 தீபம்
 தமிழன்
 தந்தி
 புதிய தலைமுறை
 சத்தியம்
 News7 Tamil
 மக்கள் TV
 Jaya TV
 Vasanth TV
 பொதிகை TV
 IBC தமிழ்
திரைப்படங்கள்
 Tamil Yogi
 Tamil Gun.com
 Thakkali
 Run Tamil
 Tamil Key.com
 Cool Tamil
 Thiruttu VCD

நாளை சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு: எடப்பாடி பழனிச்சாமி அரசு தப்புமா? ரகசிய வாக்கெடுப்பு கோர எதிர்க்கட்சிகள் திட்டம்

பிரசுரிக்கபட்ட திகதி: 17/02/2017 (வெள்ளிக்கிழமை)

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அரசின் மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவதற்காக சிறப்பு சட்டசபை கூட்டம் நாளை காலை 11 மணிக்கு நடைபெறுகிறது. இதில், பழனிச்சாமி அணியினருக்கு பெரும்பான்மை உள்ளதா என்பதை நிரூபிக்க ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று வலியுறுத்த திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. தமிழகத்தில் கடந்த 12 நாட்களாக நடைபெற்ற இழுபறிக்கு நேற்று முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. புதிய முதல்வராக எடப்பாடி பழனிச்சாமிக்கு கவர்னர் வித்யாசாகர் ராவ் நேற்று மாலை 4.30 மணிக்கு பதவிப்பிரமாணமும், ரகசியகாப்பு பிரமாணமும் செய்து வைத்தார். அவருடன் 30 அமைச்சர்களும் பதவியேற்றுக் கொண்டனர். எடப்பாடி பழனிச்சாமி தனக்கு 124 எம்எல்ஏக்கள் ஆதரவு உள்ளது என்ற கடிதத்தை கவர்னரிடம் காட்டியதன் பேரிலேயே அவரது தலைமையில் ஆட்சி அமைக்க கவர்னர் அழைப்பு விடுத்தார். பதவியேற்ற நாளில் இருந்து 15 நாட்களுக்குள் சட்டசபையில் பெரும்பான்மைைய நிரூபிக்க வேண்டும் என்றும் கவர்னர் உத்தரவிட்டார்.

தற்போது தமிழகத்தில் 233 எம்எல்ஏக்கள் உள்ளனர். ஜெயலலிதா மரணம் அடைந்துள்ளதால் ஆர்.கே.நகர் தொகுதி காலியாக உள்ளது. சட்டசபையில் அதிமுக 135, திமுக 89, காங்கிரஸ் 8, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 1 என்று உறுப்பினர்கள் உள்ளனர்.  சட்டப்பேரவையில் எடப்பாடி பழனிச்சாமி தனது பெரும்பான்மையை நிரூபிக்க 117 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவை. அவரது அணியில் தற்போது 124 எம்எல்ஏக்கள் ஆதரவு உள்ளதாக கூறியுள்ளார். ஓ.பன்னீர்செல்வம் அணியில் 10 அதிமுக எம்எல்ஏக்கள் உள்ளனர். மயிலாப்பூர் எம்எல்ஏ நடராஜும் முதல்வர் எடப்பாடிக்கு எதிராக வாக்களிப்பதாக இன்று கூறி உள்ளார். எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவு தெரிவிக்கும் 124 எம்எல்ஏக்கள், ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு சென்றுவிடக் கூடாது என்பதற்காக கடந்த 8ம் தேதி முதல் இன்று வரை 10 நாட்களாக காஞ்சிபுரம் மாவட்டம், கூவத்தூரில் உள்ள பீச் ரிசார்ட்சில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர். நேற்று முதல்வர் பதவியேற்பு நிகழ்ச்சிக்கு கூட, ஒரே காரில் 6, 7 எம்எல்ஏக்களை அமைச்சர்கள் பாதுகாப்பாக அழைத்து வந்து, விழா முடிந்ததும் மீண்டும் கூவத்தூருக்கு திரும்ப கூட்டி சென்றனர். இந்நிலையில், தமிழக சட்டப்பேரவையில் நாளையே பெரும்பான்மையை நிரூபிக்க முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி திட்டமிட்டுள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை சட்டப்பேரவை செயலாளர் ஜமாலுதீன் நேற்று மாலை வெளியிட்டார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாடு சட்டமன்ற பேரவை கூட்டம் பிப்ரவரி 18ம் தேதி (நாளை) காலை 11 மணிக்கு பேரவை மண்டபத்தில் நடைபெறும். அப்போது, அமைச்சரவை மீது நம்பிக்கை தெரிவிக்கும் தீர்மானம் எடுத்துக்கொள்ளப்படும்” என்று கூறப்பட்டுள்ளது.

அதன்படி நாளை காலை 11 மணிக்கு தமிழக சட்டப்பேரவை கூட்டம், சபாநாயகர் தனபால் தலைமையில் நடைபெறும். இதில், முதல்வர் பொறுப்பேற்றுள்ள எடப்பாடி பழனிச்சாமி அணியில் உள்ள எம்எல்ஏக்கள், ஓ.பன்னீர்செல்வம் அணியில் உள்ள எம்எல்ஏக்கள் மற்றும் திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து எம்எல்ஏக்களும் கலந்து கொள்வார்கள். கூட்டம் தொடங்கியதும், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, தனது தலைமையிலான அமைச்சரவையின் மீதான நம்பிக்கை தீர்மானத்தை முன்மொழிந்து பேசுவார். தொடர்ந்து எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், காங்கிரஸ் தலைவர் ராமசாமி, ஓபிஎஸ் அணியினர் உள்ளிட்டவர்களும் கருத்து தெரிவித்து பேசுவார்கள். இறுதியில் நம்பிக்கை கோரும் தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடைபெறும். குறிப்பாக, தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் மற்றும் காங்கிரஸ், ஓபிஎஸ் அணியினர் பேசும்போது, ரகசிய ஓட்டெடுப்பு நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்த உள்ளதாக கூறப்படுகிறது. அதை சபாநாயகர் ஏற்றுக்கொள்வாரா அல்லது வழக்கமான முறையில், ஆதரவு தெரிவிப்பவர்கள் கையை உயர்த்தி, எண்ணிக்கையின் அடிப்படையில் வாக்கெடுப்பு நடைபெறுமா என்பது நாளைக்குதான் தெரியவரும். நாளை நடைபெறும் சட்டசபை கூட்டம், தற்போதைய ஆட்சிக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த கூட்டம் என்பதால், தமிழக மக்களிடம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை பெற்றுள்ளது.

வாக்கெடுப்பு நடைபெறுவது எப்படி?
சட்டசபை நாளை காலை 11 மணிக்கு கூடியதும், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அமைச்சரவை மீது நம்பிக்கை கோரும் தீர்மானம் எடுத்துக்கொள்ளப்படும். இந்த தீர்மானத்தின் மீது அதிமுக, திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்துக்கட்சி தலைவர்களும் பேசுவார்கள். இதைத்தொடர்ந்து சபாநாயகர் வாக்கெடுப்புக்கு விடுவார். தற்போது 233 எம்எல்ஏக்கள் உள்ளனர். இதில் 117 எம்எல்ஏக்களின் வாக்கு எடப்பாடி பழனிச்சாமிக்கு கிடைத்தால் மட்டுமே அவரது அமைச்சரவை நீடிக்க முடியும். சட்டசபையில் எம்எல்ஏக்களின் இருக்கைகள் 6 பகுதிகளாக உள்ளன. ஒவ்வொரு பகுதியாக வாக்கெடுப்பு நடைபெறும். இதில் ஆதரிப்பவர்கள், எதிர்ப்பவர்கள், நடுநிலை வகிப்பவர்கள் என மூன்று பிரிவாக வாக்கெடுப்பு நடைபெறும். ஆதரிப்பவர்கள் கையை உயர்த்த சொல்லி எண்ணப்படும். இப்படி 6 பகுதிகளிலும் உறுப்பினர்களிடம் தனித்தனியாக வாக்கெடுப்பு நடத்த வாய்ப்புள்ளது. 

ஆனால், திமுக மற்றும் ஓபிஎஸ் அணியினர் கூறும் குற்றச்சாட்டே, எம்எல்ஏக்களை கட்டாயப்படுத்தி எடப்பாடி பழனிச்சாமி அணியினர் அடைத்து வைத்துள்ளனர் என்பதுதான். அதனால், ரகசிய வாக்கெடுப்பு நடத்தினால் மட்டுமே எம்எல்ஏக்களின் உண்மை நிலை தெரியவரும். அதனால் நாளை நடைபெறும் வாக்கெடுப்பை, ரகசிய வாக்கெடுப்பாக, அதாவது ஒரு காகிதம் கொடுத்து அதில் தற்போதைய எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அமைச்சரவை ஆதரிக்கிறேன், எதிர்க்கிறேன், நடுநிலை என எழுதி  வாக்களிக்க அனுமதிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சியினர் வற்புறுத்துவார்கள். 




மரண அறிவித்தல்கள்
மேலும்... 
புதிய படங்கள்
நாவாந்துறை புனித மரியன்னை தேவாலயத்தில் வளாகத்தில் சிலுவைப்பாடு சிற்பத்தொகுதி
Uploaded Date: 30/04/2018
சின்னாவின் உப்புக்கடலோரம் கவிதை நூல் வெளியிடப்பட்டது
Uploaded Date: 12/04/2018
புனித நீக்கிலார் ஆலய திருவிழா 2017 படத் தொகுப்பு
Uploaded Date: 30/04/2017
தவக்கால செயல்திட்டமாக நாவாந்துறை சென்மேரிஸ் இளைஞர் கழகம் நிதிய உதவி
Uploaded Date: 12/03/2017
யாழ் நாவாந்துறை புனித மரியள் ஆலய திருவிழா
Uploaded Date: 15/08/2016
புதிய காணொளிகள்
வந்தான் ஒருவன் வந்தான்
Uploaded Date:08/03/2021
ஆளப்போறான் தமிழன் உலகமெல்லாமே
Uploaded Date:28/10/2017
பரபாஸ்” திருப்பாடுகளின் காட்சிகளின்
Uploaded Date:18/04/2017
ஐல்லிக்கட்டு ஈழ மண்ணில் உருவாக்கப்பட்ட புதிய பாடல்
Uploaded Date:20/01/2017
ஜல்லிக்கட்டு இன்றைய நிலை
Uploaded Date:14/01/2017